பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ஒரு கம்பை எடுத்து அதன் காலை ஒடித்து விட்டான். பிறகு அந்தக் கொக்குக்குச் சிகிச்சை செய்ய அதைத் தன் வீட்டுக்குக் கொண்டு போனான்.

சில நாட்களில் கொக்கு குணமடைந்து பறந்து போய் விட்டது. அந்தப் பணக் காரன் தன் கழனிக்குப் போய் அந்தக் கொக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள், அந்தக் கொக்கு பறந்து வந்து இரண்டு விதைகளைப் போட்டது, அந்த விதைகள் முளைத்து விட்டன. கொடி படர்ந்து, பூவெடுத்து, முலாம் பழங்கள் பழுத்தன.

 அது கண்ட அந்தப் பணக்காரன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் தன்