இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
மூன்றாவது பூனைக் குட்டியைக் கொண்டு வரும் வரை வீட்டில் யாருக்கும் இரண்டாவது குட்டி இருப்பது தெரியாது.
ஒரு சமயம் தந்தை, அம்மா, அல்யான் மூவரும் தேநீர் அருந்திக் கொண்டனர்.
ஒரு பூனைக் குட்டி மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தன.
"இங்கே பார்; நம்மிடம் வெள்ளை நிற பூனைக் குட்டியல்லவா இருந்தது. இந்த குட்டி பழுப்பாக இருக்கிறதே!"
ஏதோ இதனைப் புரிந்து கொண்டது போல் பழுப்புப் பூனைக் குட்டி ஓடி ஒளிந்து கொண்டது. உடனே கறுப்புப் பூனைக் குட்டி (மூன்றாவது) வெளியே வங்தது. அதனைக் கண்ட தந்தை வியப்பால் கத்தினார்; இது என்ன விந்தை! இந்தக் குட்டி கறுப்பாக அல்லவா இருக்கிறது. இங்கு என்ன நடக்கிறது?
உடனே அல்யான் கறுப்புக் குட்டியை தன் அறைக்குள் விட்டு விட்டு வந்தான்.