பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


பார்த்தது. நிலாவின் அழகைப் பார்த்து மயங்கிப் போன பறவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது.

பிறகு நிலா விழித்தெழுந்தது. நீயும் நன்றாக உறங்கினாயா? என்று பறவையைக் கேட்டது.

நான் இப்பொழுதுதான் உறங்கி விழித்துக் கொண்டேன். உன்னை எழுப்பலாம் என்றிருந்தேன். அதற்குள் நீயே விழித்துக் கொண்டாய்; அது சரி! என் வீடு அருகில் தான் இருக்கிறது; போகலாம் வாயேன், என்றது பறவை.