பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

குதிரைத் தொழுவத்தில் போடச் சொன்னான். ஆனால் இப்போது என் பங்கு என்று சொல்லியபடி கரடி குதிரை தொழுவத்திற்குள் சென்று குதிரைகளைக் கடித்துக் கொன்று விட்டது.

அடுத்த நாளும் சேவல் பழையபடி கதவின் மீதிருந்து பாடியது.

இம்முறை அதிகம் ஆத்திரம் அடைந்த பணக்காரன், சேவலைப் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால்