பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இங்கு ஒரு பாலம் கட்டுங்கள் என்று சிங்கம் உத்தரவிட்டது.

உடனே வேலையைத் தொடங்குங்கள். நரி தான் மேஸ்திரி. கரடி, கழுதை முதலிய நீங்கள் எல்லோரும் செங்கல்களையும், இரும்புத் தூண்களையும், பலகைகளையும் இழுத்து வர வேண்டும்.........

இவ்வாறு சிங்கம் உத்தரவிட்ட போதிலும், கழுதை அசையாமல் நின்று கொண்டிருந்தது.அது சிந்தனையில் மூழ்கி இருந்தது.