பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51



ஈயின் விபரீத ஆசை

ஈ ஒன்று மனிதனிடம் .சென்று அவனைப் புகழ்ந்துப் பேசி, தனக்கு ஒரு

வால் வேண்டும் என்று கேட்டது, வாலுள்ள மிருகங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன; எனவே, எனக்கும் ஒரு வால் வேண்டும்' என்று அது சொல்லியது.

மனிதன் என்ன சொல்லியும், ஈ கேட்க வில்லை; பிடிவாதமாக வால் வேண்டும் என்று நச்சரித்தது.