இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59
பசு பதில் ஒன்றும் கூறவில்லை.
மாறாக தன்னுடைய வாலால் ஈயின் மீது
ஒரு அடி அடித்தது.
அவ்வளவு தான். ஈ பொத்தென்று தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதன்.
ஆம். இப்பொழுது உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இனிமேலாவது மனிதர்களையும், மிருகங்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்து என்றான்.