பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63




புலியின் சிந்தனை


ஒர் புலி பசியுடன் சென்று கொண்டிருந்தது. திடீர் என்று ஒரு குள்ள நரியைப் பார்த்தது; அதனைப் பிடித்துச் சாப்பிட நினைத்தது.


புலியே, உன் பற்களைக் காட்டாதே. உனக்கு ஏதாவது தொல்லை நேருவதற்கு முன்பே நீ இவ்விடத்தை விட்டு ஓடி விடு. உனக்கு நான் யார் என்று என்று தெரியுமா? நான்தான் காட்டு விலங்குகளுக் கெல்லாம் அரசி என்றது நரி.

முட்டாள் தனமாகப் பேசாதே. நான் தான் காட்டு விலங்குகளின் அரசன் என்பதை அனைவரும் அறிவர் என்று முழங்கியது புலி.

நீ என்னை நம்பாவிட்டால் என்னோடு வா. விரைவில் யார் எவர் என்பதை நீ உணர்ந்து கொள்வாய் என்றது நரி.