பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

உயிரோடு இருக்கிறதா, அல்லது பின்னேடி மறைந்து கொண்டிருக்கிறதா என்று எல்லோராலும் ஏளனத்தோடு கேள்வி மாரி பொழியும் வேளை:

உள்ளுறைக் கூடத்திலே பகல் நேரம் போக இராக் காலங்களிலும் கூட மின் விளக்கின் ஒளியிலே உல்லாச மாய் ஆடக் கூடிய ஆட்டமொன்று நமக்குக் கிடைக்காதாஇன்பம் படைக்காதா- நம் நெஞ்சம் மகிழாதா ! என்று அங்கத்தினர்கள் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்த

பொழுது; வறியவனுக்குப் பொற் கிழி கிடைத்தது போன்று, பசித்தவனுக்கு அறுசுவை உண்டி படைத்தது போன்று, கூடைப் பந்தாட்டம் உருவாகி அவர்கள் முன்னே காட்சியளித்தது. கனவு நனவானது - கற்பனை காட்சி யானது என்று கட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளுறை விளையாட்டுக் கூட அங்கத்தினர்கள் அன்று திளைத்தனர்.