பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 விளையாட்டுக்களின் விதிகள் அ

குறிப்பு: 1. பந்தெறிபவர் அல்லது பந்தைத் தடுத்தாடுபவர் அனைவரையும் கடந்து வருகின்ற பந்து, நடுவர் அல்லது தள ஒட்டக்காரர் மீது பட்டால், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். -

2.தடுத்தாடுபவர்பந்தைத்தடுத்தாடுவதற்கு முன்னதாக, அதற்கு முன்னாலேயே பந்தானது நடுவர் அல்லது தள ஓட்டக்காரர் மீது பட்டுவிட்டால், பந்துநிலைப்பந்தாகிறது. ஒரு தளம் நோக்கிச்செல்ல பந்தடி ஆட்டக்காரர் அனுமதிக்கப்படுகிறார். தொடப்பட்டாலும் அப்பொழுது அவர் ஆட்டமிழக்கமாட்டார் என்ற உரிமையுடனே அவர் தளம் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்.

7. பந்தடி ஆட்டக்காரர் தனது பந்தடித்தாடும் தளத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, பந்தெறியாளரிடமிருந்து எறியப்பட்டு வருகிற பந்தானது அவரது உடலின் மீதோ அல்லது உடையின் மீதோ படாமல் இருந்தால், அந்தப் பந்தானது அவரது உடலின் மீது படுவதற்கு முன் தரையினைத் தொட்டிருந்தாலும்.

குறிப்பு: பந்து நிலைப்பந்தாகிறது. நடுவரானவர் அதனை பந்து என்றோ அடி (Strike) என்றோ அறிவிக்கலாம்.

3. தள ஓட்டக்காரர் தொடப்பட்டால் ஆட்டமிழப்பார்:

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின்படி, ஒரு பந்தடி ஆட்டக்காரர் தளம் நோக்கி முன்னேறும் பொழுது தொடப்பட்டால் ஆட்டமிழப்பார்.

1. பந்தெறிவதற்காக பந்தெறிபவர் எறிய, அந்தப் பந்தானது அவரது கையை விட்டு நீங்குகிற பொழுது,

2. வீண் எறி (Over throw) மூலமாக எறியப்பட்ட பந்தானது, ஆடுகள உட்பகுதியில் அல்லது எல்லைக்கு வெளியே போகும் பொழுது தடுக்கப்படாமல் இருந்தால்.

3. ஆடுகள சரியான பரப்பில் அடிபட்ட பந்தானது போகும் பொழுது அது தடுக்கப்படாமல் இருந்தால். 4.தளம் தொடாமல் ஓடும் ஒட்டக்காரர் ஆட்டமிழத்தல்:

1. பந்து ஆட்டத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு உரியதான தளத்தினைத் தொடத் தவறிவிட்டு, அடுத்த தளத்திற்குச் செல்ல முயற்சித்தல். -

முதலில் அடித்தாடிய பந்தடி ஆட்டக்காரர், ஓடிவருகிற பொழுது தள ஓட்டக்காரர் அல்லது வேறு ஒரு தள ஓட்டக்காரர் முதல்தளத்தில்