பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 - விளையாட்டுக்களின் விதிகள் *Eo

3. எல்லாதளங்களிலும் ஆளில்லாமல் இருந்தால் ஓட்டம் எடுக்க (Pl5l. o - -

4. தள ஓட்டக்காரர்கள் திரும்ப தங்கள் தளத்திற்கு வரும்போது, இடைப்பட்ட தளங்களைத் தொட வேண்டியதில்லை. ஆனால் சரியான முறையில் வர வேண்டும்.

5. திரும்ப வந்து சேருவதற்குரிய நேரம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். - o 8. அடித்தாடுபவர்கள், தள ஓட்டக்காரர்கள் ஆட்ட

மிழக்கும் சூழ்நிலை . அடித்தாடுபவர், தள ஓட்டக்காரர்கள் கீழ்க்காணும் சூழ்நிலை களில், வெளியேற்றப்படுவார்கள்.

1. மூன்றாவது அடியை பிடிப்பவர் தவறவிட்ட பின்பு, பந்தை வைத்துக் கொண்டு தடுத்தாடுபவரில் ஒருவர் அடித்தாடுபவரை முதல் தளத்திற்குச் செல்லுமுன் தொட்டால்; - -

2. மூன்றாவது அடியை பிடிக்காமல் தவறவிட்டபின்னர், அந்தப் பந்தை முதல்தளத்தில் தடுத்தாடுபவர் அடித்தவர் வந்துசேருவதற்கு முன் பந்தை அந்தத் தளத்தில் வைத்துவிட்டால்; -

3. சரியாக அடிக்கப்பட்டப் பந்தைக் கொண்டு, அடித்தவர் முதல் தளம் அடைவதற்கு முன்னே தொடப்பட்டால்; -

4. சரியாக அடிக்கப்பட்டப் பந்தைத் தள ஓட்டக்காரர் கையில் வைத்துக் கொண்டு முதல் தளத்தை அடித்தாடியவர் வருமுன் தொட்டால்;

5. அடிபட்டு பறக்கும் பந்தானது தரையிலோ அல்லது மற்ற பொருளின் மீதோ படுவதற்கு முன்தடுத்தாடுபவர் பிடித்துவிட்டால்; தண்டனை: பந்து ஆட்டத்திலிருக்கும், அடித்தவரான தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படுவார்.

6. அடித்தவர் மூன்றடி தூர எல்லைக் கோட்டைத் தாண்டி அப்பால் ஓடினால், அப்படி ஓடும்போது தடுத்தாடுபவருக்குத் தடையாகக் குறுக்கிட்டால்.

தண்டனை: பந்து நிலைப்பந்தாகும். அடித்தாடிய தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படுவார். 9. தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படும் சூழ்நிலை

1. தளங்களுக்கிடையே ஓடும்போது மூன்றடி நேர்க்கோட்டைத் தாண்டி தடுத்தாடுபவர் தொடுவதிலிருந்து தப்பிக்க அப்பால் ஓடினால்;