பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

சிந்தை கவரும் பந்து விளையாட்டை எந்த நிலையில் இருந்தாலும் அந்தக் காலத்தில் பெண்கள் ஆடி மகிழ்ந்தனர். அவர்கள் ஆடி- மகிழ்ந்ததை, கூடி மகிழ்ந்ததைக் கண்டும் கேட்டும் சுவைத்தக் கவிஞர்கள் கவிநயம் சொட்டச் சொட்டத் தங்கள் கவிதையில் பாடி மகிழ்ந்தனர். சுவையாரம் சூட்டிப் புகழ்ந்தனர். படித்து நாமும் மகிழ்வோம். பெண்கள் பந்தாட்டத்தை வளர்த்து பெரும் புகழ் கொள்ள நாம் உற்சாகப்படுத்துவோமாக !

பந்து, கதைகளை மட்டும் பிறப்பிக்கவில்லை; பாங்கான பலதிறப்பட்ட விளையாட்டுக்களையும் மிகமகப் பக்குவமாகப் பிறக்க வைத்திருக்கிறது என்பதைச் சரித்திரச் சான்றுகள் நயம்பட உரைக்கின்றன. அவ்வாறு பிறந்து வளர்ந்து, விரிந்த விளையாட்டுக்கள் பற்றி இனி காண்போம்.