பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

& 1 கம்பீரம் பண்டைய வீரம், விளையாட்டுப் போட்டி களில் வைத்திருந்த விவேகம் எல்லாம் என்ன ஆவது ? மாரத்தான் ஓட்டம் தொடங்கிவிட்டது. மனதை அழுத் திப் பிடித் துக் கொண்டு முடிவுக்காக மக்கள் காத்திருக் கின்றனர். முடிவு-லூயிஸ் என்ற இளைஞனே கிரேக்கத்தின் மானத்தைக் காப்பாற்றினான். மன்னரே எதிரே ஓடிவந்து மார்புறத் தழுவிக்கொண்டு தன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். ஆடு மேய்க்கும் இளைஞனாக இருந்த வனின் அற்புத ஆற்றலை, ஆ ண்மையை அகில உலகமே புகழ்ந்து கொண்டி ருந்த நேரம்; அந்தக் கூட்டத்தை நோக்கி மூன்று பேர் ஓடி வந்தனர், மானம் காத்த மாவீரனைக் கண்டவுடன், அவர்கள் சத்தமிட்டுக் கூறிய விநோத அறிவிப்பு அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டின் கெளரவத்தையும் கீர்த்தியையும் காத்த லூயிசின் வாழ்நாள் முழுவதும் இலவசமாக முடி திருத்தி அலங்காரம் செய்வேன் என்றார் ஒருவர். அழகான ஆடைகளை ஆயுட்காலம் முழுவதும் வழங்கு வேன் என்றார் இன்னொருவர். அவர் ஒரு துணிக்கடைக்காரர். மற்ற வர் கூறினார் ? மனதுக்குப் பிடித்தமான சுவையான உணவை அவருக்குத் தருவேன் என்றார், அவர் ஒட்டல்காரர். தாய்நாட்டின் வெற்றிக்காக தொண்டாற்றியவர்களைப் பாராட்ட வந்த அந்த விநோத அறிவிப்பு எப்படி ? இவ்வாறு வரலாறு புகழும் சிறப்பைத் தருகின்ற வெற்றியை, நியாயமான வழியிலே பெறுவோரும் உண்டு. தகுதியற்ற சிலர், வெற்றி பெற வேண்டுமென்று தகாத வழிகளை. முறைகளையெல்லாம் பின்பற்றுவதும் உண்டு. தகுதியும் திறமையும் அறிவு புகழும் உள்ள அறிஞர் களுக்கும் பெரியவர்களுக்கும் சீலை எடுப்பதை நாம் கேள்விப். வி, வி.-6