பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


இதற்கு மாறாக 1882ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, வெற்றி கைமாறிப் போய்விட்டது.

1882ம் ஆண்டில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கியபோது, 85 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கட்டத்தில் இருந்தது.

ஆனால் 7 விக்கெட் இழப்பிற்குப் பிறகு இங்கிலாந்து எடுத்த மொத்த ஒட்டங்கள் 70.

இன்னும் 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். இருக்கின்ற ஆட்டக்காரர்கள் (விக்கெட்) முன்றுபேர், அவர்கள் மூவரும் ஆடி 15 ஒட்டங்கள் எடுக்க மாட்டார்களா என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து மக்கள் தைரியமாக இருந்தபோது, அந்த மூன்று ஆட்டக்காரர்களும் ஏழு ஒட்டங்கள் எடுத்து, ஆட்டம் இழந்து போயினர்.

அதனால் இங்கிலாந்து தோற்றுப் போய்விட்டது.

அந்த நிகழ்ச்சியை ஸ்போர்ட்டிங் டைம்ஸ் (Sporting times) என்ற பத்திரிக்கை, தோல்வியை மரணச் செய்தியாக உருவகித்துப் பிரசுரித்தது.

மக்கள் அபிமானச் சின்னமாக விளங்கி வந்த இங்கிலாந்தின் கிரிக்கெட் ஆட்டமானது, 1882ம் ஆண்டு ஆகஸ்டு 29ந் தேதியன்று ஒவல் மைதானத்தில் இறந்துபோய் விட்டது. நெருங்கிப் பழகியவர்களும் நண்பர்களும் சுற்றிச் சூழ்ந்திருக்க, இறந்துபோன கிரிக்கெட் உடலானது எரிக்கப்பட்டுவிட்டது.