பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

போனேன். ஆனால் ராமானுஜம் மறக்காமல் ரூ.5000- த்தைக் கொண்டு வந்திருக்கிறார். நான் இல்லை என்று தெரிந்தும், என் மனைவியிடம் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்.

முயற்சி மிகுந்தவர்களுக்கு கடவுள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, உதவி செய்ய வந்துவிடுவார் என்று இலக்கியங்கள் நிறையவே பேசும்.

நானும் அப்படித்தான்நம்பினேன். நிறையவே நம்பு கிறேன். இன்னும் நம்புவேன். -

விளையாட்டுத் துறையில் நான் இத்தனை நூல்களும் எப்படி எழுதி முடித்தேன் என்றால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையும் அற்புதங்களையும் ஆண்டவன் எனக்கு அநேக முறை செய்து உதவியதால்தான். இந்த அதிசயங்களை இப்பொழுது நினைத்தாலும் என்உடல் சிலிர்த்துக் கொள்கிறது. மனமோ இனம் புரியாத ஒரு இதத்திற்குள் அலை பாய்ந்து கொள்கிறது.