178
விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
24. ஆவேசம்
விளையாட்டு துறையில், நிறைய புத்தகங்களை எழுத வேண்டும், எழுதியே ஆக வேண்டும், எழுதித்தான் தீரவேண்டும் என்ற என் இலட்சிய நினைவுகளுக்கு, செயல்களுக்கு, நடந்து போக, ராஜபாதையா கிடைத்தது? நெரிஞ்சல் முட்கள் நிறைந்த காடுமலைப் பாதை.
சோதனைகளும், வேதனைகளும் உடன் தோன்றிய பிறப்புக்களாகத் தொடர்ந்தன. காரணம்-விளையாட்டுத்துறை பற்றி மக்கள் அதிகம் அறிந்து கொள்ளாததுதான், அவர்களால் போதிய ஆதரவுதனைக் காட்ட முடியவில்லை. அவ்வளவு
„%, TTGTJT.
என் எழுத்துக்கள் இல்லாம் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்பாதகவே இருந்ததால், இளைஞர்கள் என்றால், பள்ளிகள், கல்லூரிகள் பக்கம் தானே போக வேண்டும்.
பாமர மக்களையாவது கொஞ்சம் முயற்சி செய்தால், பக்குவப் படுத்திவிடலாம், படித்த மக்களை எப்படி மாற்ற முடியும்? மயக்க முடியும்?
படித்த மக்கள் யார் என்றால், தங்களையும் குழப்பிக் கொண்டு, பக்கத்தில் வருபவர்களையும் குழப்புவர்கள் என்று
பாரதி முதல் இன்றைய எழுச்சிக் கவிஞர்கள்