பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி / 29

தேவைப்பட்ட மாணவர்கள் எல்லோரும், என்னைத் தேடி வந்து விடுவார்கள்.

அதிகமாக விளையாடிக் களைத்துப் போயிருக்கும் என்னிடம் வேலை வாங்குகிற உபாயத்தையும், அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்க்ள.

என்னிடம் பாடம் படிக்க வருகிற போதே, கையில் பொட்டலத்துடன் வருவார்கள். அந்த பொட்டலங்கள் வேர்க்கடலை, மிக்ஸர், காராசேவு போன்ற நொறுக்குத் தீனிகள்.

பொட்டலம் கரையும் வரை பாடங்கள் கற்றுதருவது நீடிக்கும் . எனது குரு தட்சணை இப்படியாக கிடைத்துவந்தது.

இதில் எனக்கு என்ன லாபம் என்றால், புரியாத மாணவர்களுக்கு, அவர்கள் புரிந்து கொள்கிறவரை, விளையாட்டுப் பாடங்களை நடத்த வேண்டியிருந்ததால், எனக்கும் அந்தப் பாடங்கள் எல்லாம் அத்துப் படி ஆகி விட்டன.

ஒய்வு நேரத்தில் திண்பண்டம், மாணவர்களுடன் ஆழ்ந்த நட்பு, அதே சமயத்தில், பாடங்கள் எல்லாம் என மனதில் ஆழப் பதிந்துபோயின.

இதன் எதிரொலியாக எனது டிப்ளமோ, தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வில், நான் முதல் மாணவனாக சிறப்புத் தேர்ச்சி பெற்றேன். (First Rank with Disinction).

முதல்வர் ராப்சன் அவர்களுக்கு, நான் தேர்வில் பெற்ற வெற்றி குறித்து மிகவும் பெருமை.

‘எப்படியம் நான் உனக்கு நல்ல வே ைவாங்கிக்