பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 39

o 5. எழுச்சி பெற்ற இலட்சியம்

விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தில், நூறு நூல்களுக்குமேல் எழுத நேர்ந்த சூழ்நிலையை, ஆசிரியர் வாசகர்களுக்கு சுருக்கமாக சொல்லும் பகுதியாக களஞ்சியத் தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இலட்சியங்கள் எதுவுமே எளிதாக நிறைவேறிவிடுவ தில் லை தடைகளும், துயர்களும், தடுமாற்றங்களும், திகைப்பூட்டும் சந்தர்ப்பங்களும், இலட்சியவாதிகளை குதறி விடுவதோடு நின்று விடாமல், குழப்பியும் கொள்கை மாறிப் போகவும் செய்து விடுகின்றன.

அவற்றிலிருந்து, எப்படியெல்லாம் தப்பித்துக் கொண்டு தான் நினைத்ததை சாதித்தார் என்கிற வரலாற்றினை, நீங்கள் படித்து மகிழ்கின்றீர்கள்.

ஆசிரியரின் இலக்கியப் பணி, காரைக் குடியில் உள்ள அழகப்பா கலைக்கல்லூரியில் இருந்துதான் ஆரம்பமாகிறது. விளையாடியும், நாடகம் எழுதியும், நடித்தும் மகிழ்ந்து கொண்டிருந்த ஆசிரியரை,விளையாட்டுத் துறை இலக்கிய நூல்கள் எழுதும் இலட்சியத்தை ஏற்றுக்கொள்ள வைத்தது, அது எழுச்சி பெற்றது போன்ற நிகழ்ச்சிகள் இங்கே தொடர்கின்றன.

‘இந்தக் கவிதையை உங்களுக்கு யார் எழுதித் தந்தது?