பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 47

உங்களால் தான் சும்மா இருக்க முடியாதே! வாலிபால் விளையாடப் போய் காலை ஒடித்துக் கொண்டு நான்கு மாதம் கஷ்டப்பட்டீர்கள், இப்பொழுது தான் பரவாயில்லை. இதற்குள் இன்னொரு வேலைக்கு தயாராக இருக்கிறேன் என்கிறீர்களே என்றார்.

அழகப்பா கலைகல்லூரியில் உடற் கல்வி இயக்குநராகப் பணியேற்றுக் கொண்ட பிறகும், நான் விளையாடுவதை நிறுத்த வில்லை. கைப்பந்தாட்டப் போட்டிகள் எங்கு நடைபெற்றாலும், கலந்து கொள்வதையும் நான் நிறுத்தவில்லை.

காரைக்குடியைச் சுற்றி 50 மைல் சுற்றளவிற்குள் போட்டிகள் எங்கு நடந்தாலும் என் குழு நிச்சயமாகப் பங்கேற்கும்.குறிப்பாக கைப்பந்தாட்டத்தில் மூவர் போட்டி (Tibles Match) தான் நடத்தப்படும் பள்ளத்தூரில் நடைபெற்ற கைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளப் போய் இடது கால் கணுக் கால் எலும் பு உடைந்து கட்டுப் போட்டுக் கொண்டு கிடந்தேன். தடி ஊன்றிக் கொண்டு கல்லூரியிலும் நடந்தேன். இந்த நிகழ்ச்சியைத் தான் டாட் அவர்கள் நினைவு படுத்தினார்.

ஏதாவது செய்தாக வேண்டுமே! சும்மா இருந்தால் எப்படி? என்னால் சும்மாவே இருக்க முடியவில்லை அதனால்தான் புத்தகம் எழுதும்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டுமே என்று கேட்டேன்.

என்ன என்றார்?

நீங்கள் தான் கூடை பந்தாட்டப் போட்டியில் சென்னை பல்கலைக் கழக அணியின் தலைவராக இரண்டாண்டுகள் ஆடியிருக்கிறீர்கள். நிறைய அனுபவம் இருக்கிறது. கூடைப் பந்தாட்டம் பற்றி நீங்கள் எனக்குக் கூறினால், குறிப்பெடுத்துக்