பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

கிளம்பப் போகிறீர்கள் என்றார் அவர்.

என்னய்யா? வேலை நிரந்தரம் ஆகி இப்போது தான் கவலையில்லாமல் இருக்கிறேன். காரைக் குடியிலேயே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு தங்கி விடலாம் என்றல்லவா உறுதி செய்திருக்கிறேன்.

இப்படி கூறுகிறீர்களே என்றேன்.

இன்னும் இரண்டு விஷயங்களைக் கூறி, வீட்டிற்குப் போனதும் விசாரியுங்கள். நாளைக்கு சந்திப்போம் என்று புறப்பட்டு விட்டார். அவரைப்பற்றி அப்போது நான் அதிகமாக விசாரிக்க வில்லை. அவருடைய வார்த்தை எவ்வளவு உண்மை என்று இப்போது நன்றாகவே உணர்கிறேன்.

நாடக ஒத்திகையில் என் மனம் லயிக்க வில்லை. ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். அவர் முகம் பார்த்துக் கூறியவைகளை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. வீட்டை நோக்கி விரைந்தேன். விவரம் தெரிந்து கொள்ள விதியும் எனக்கு முன்னே வேகமாகப் போய் என்னை வரவேற்றது போல இருந்தது. நடந்த பல விஷயங்களை பார்த்த போது, எனக்கு அப்படித்தான் இருந்தது.