பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7|

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

9. சக்தியின் சாகசம்!

வீட்டிற்கு விரைந்து வந்தேன்.

ஜோசியர் சொன்ன விவரத்தைக் கேட்டேன். மனைவியும் ஆமாம் என்றாள்.

இரண்டு விஷயங்கள் உண்மை என்றால், மூன்றாவது அவர் சொன்னதும் நடந்துவிடுமோ?

அழகப்பா கலைக்கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராக, நிரந்தரப் பணியில் அமர்ந்திருந்த நான், விரைவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறி விடுவேன் என்று அவர் சொன்ன ஜோசியம் பலித்து விடுமோ?

அதெப்படி நடந்துவிடும் ? நான் ராஜினாமா செய்தால்தானே நடக்கும், நான் உறுதியாக இருக்கும் வரை, ஒன்றும் நடந்து விடாது. என்னையறியாமல் நடந்தாலும், இதை நடக் கவிடேன் என்ற படி, எண்ணத்தில் தெளிவாகவே இருந்தேன்.

என்ேனையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது. அது அனைவரையும் இயக்குகிறது என்ற அனுபவத்தை அறியாத இளம் வயதல்லவா ஆகவே அந்த சக்தி என்னை எப்படி வலைக்குள் விழ வைத்து வெற்றி கண்டது என்பதுதான் வியப்புக்கும் மேலான வியப்பாக இருக்கிறது.