பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 20 குடியிருக்கும் வீட்டையும் பந்தயமாகக் கட்டுவா ர்களாம். அதிலும் தோற்ருல் தங்கள் மனைவியரையும் ஈடு வைப்பார்களாம். அதிலும் தோற்ருல் தங்களது குழந்தைகளையும் பந்தயப் பொருளாக வைத்து ஆடி யிருக்கின்ருர்கள் என்ருல் அவர்களை என்ன சொல்ல! இதற்கு கம் பாண்டவர்களே மேல் போலும். இதல்ை ரோம் சாம்ராஜ்யத்தில் ஒரு புதிய சட்டத் தையே பிறப்பித்திருக்கின்ருர்கள். யாருமே சூதாடக் கூடாது' என்ருலும், அது தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது? மக்கள் எந்த காலத்தில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஆட்டமும் வாழ்க்கையும் ஒன்றுபோல்தானே தொடர்ந்து வருகிறது பபதைத் தானே இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது! தவறு செய்தால் தண்டனே ! தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். இதில் ஆச்சரியமே இல்லை. தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை என்ருல்தான் ஆச்சரியம். ஆனல், இங்கே தவறு செய்தவர் தவறுக்குள்ளானவர் யார் யார் என்று அறிந்தால் அது ஆச்சரியமாகவே இருக்கும். கிரேக்க நாட்டில் நடந்த பழைய ஒலிம்பிக் பந்தயத் தில், தியாகனஸ் என்பவன் சிறந்த குத்துச் சண்டை வீரன். அவனிடம் பலர் தோற்றிருக்கின்றனர். அவன் இறந்த பிறகு, அவனுக்கு அவன் வாழ்ந்த நகரத்தினர் சிலை அமைத்துச் சிறப்பு செய்தனர். ==