பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விளையாட்டு அமுதம் தால், நமக்கே கொஞ்சம் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது. கிரேக்க தேசத்தில் ஸ்பார்ட்டா என்ற ஒரு நாடு இருந்தது. அதில் தான் இப்படி ஒர் ஆச்சரியமான சட்டத்தைப் போட்டு இருந்தார்கள். அதிகமான கொழுப்பேறிக் கொழுத்துப் போகின்றவர்களுக்கு சாட்டையடிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த சட்டம். நல்ல பாம்பு சீறுவது போல சத்தம் கேட்கிறது என்று திரும்பிப் பார்த்தால், குன்று போல கொழுத்த மனிதர்கள்தான் நம் பின்னல் நடந்து வருகின்ருர்கள் என்கிற நிலையை நாம்காணும்போது இங்கேஸ்பார்ட்டா, தேசத்து சட்டம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. அவர்கள் தங்கள் உடம்பின் மேல், அதன் கட்டழகு மேல், கவர்ச்சிக்குள் எத்தனை மோகம் உடையவர்களாக இருந்திருக்கின்ருர்கள் என்று எண்ணும்போது, அவர் களே வாழ்த்தாமலும் இருக்க முடியவில்லை. உடம்பில் சதை விழுந்தால் வதைதான் என்பதை புரிந்து கொண்டால், நமக்கும்வழி ஏற்படாமலா போகும் என்பதை உணர்ந்து வாழ்ந்தாலே போதுமானது! பிறகு சாட்டையடி எதற்கு? வெள்ளி முளேத்தது! விடியவில்லையே! 1900ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் பந்த யத்தில் இந்தியர் ஒருவர் 200 மீட்டர் ஒட்டப் பக்த