பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

43

அவரது பிறந்தநாள் ஏப்ரல் 13ந் தேதி வரும். அன்று ஒரு மைல் துார ஓட்டம் நடக்கும். 20வது வயதில் 4 நிமிடம் 12 வினாடியில் ஓடினார் என்று நமக்குத் தெரியும். தனது 60ஆம் வயது பிறந்த நாளில் ஒரு மைல் துார ஓட்டத்தை 6 நிமிடங்களுக்குள் ஓடினார். தனது 68ஆம் வயது பிறந்த நாளன்று 6 நிமிடம் 18 வினாடிகளில் ஓடினார். 70 வயதிலும் ஓடினார்.

70 வயது இளைஞரின் இனிய சாதனையைப் பாருங்கள்.

ஆங்காரப் பொக்கிஷம், கோபக் களஞ்சியம், ஆணவ அரண்மனை, பொய் வைத்தக் கூடம், பொறாமைப் பெருமதில், காம விலாசம், கந்தல் கடிமனை, காற்றுத் துருத்தி, ஊற்றைச் சடலம், ஓட்டைத் துருத்தி, உடையும் புழுக்கூடு, ஊன் பொதிந்த காயம் என்று நமது உடம்பைப்பற்றி பட்டினத்தார்போன்ற சித்தர்கள் பாடிச்சென்றார்கள். அதுபோல் நாம் ஏன் நினைக்கவேண்டும்? வேறுவிதமாக நினைப்போமே! அழகாக, அருமையாக!

தெய்வம் வாழும் இல்லம் திறமை வளர்க்கும் தேன் நிலம், தென்றல் தவழும் சுந்தரப் பூங்கா, கேட்டதைத்தரும் கற்பகத் தரு, வளமை நிறைந்த வல்லாளர் பூமி,சொர்க்கத்தைக்காட்டும் சுந்தரத் தோழன் என்றெல்லாம் நாம் நினைக்கலாமே!

எந்த உயிர்க்கும் கிடைக்காத அரிய பிறவியாம் மனிதப் பிறவியைப் பெற்றிருக்கிறாேம் நாம். எந்தப் பிறவிக்கும் கிடைக்காத எழிலார்ந்த தேகத்தை மனித இனமாகிய நாம் பெற்றிருக்கிறாேம். அளப்பரிய ஆற்றலை, ஆண்மையை, அறிவினை, அற்புத சக்தியை நமக்கு ஆண்டவன் அளித்திருக்கிறான். தெளித்திருக்கிறான்.

‘வருடம் ஒன்று போனால் வயதொன்று போய் விட்டது. வாலிபம் வழி நடந்து சென்றுவிட்டது.