பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

90


36. ஆர்வத்திற்கும் அளவு உண்டோ!

இளமையின் எழுச்சியும், போராட்ட உணர்ச்சியும் கரைபுரண்டு மோதும் களமாகக் காட்சியளிப்பது விளையாட்டுலகமாகும். விளையாடுகின்றவர்கள் தான் உணர்ச்சி வசப்படுவார்கள், வீறு கொண்டு எழுவார்கள். மாறுபாடுடன் விதிகளை மீறுவார்கள் என்கிற பொதுவான நிலையையும் புறம் தள்ளிவிடுகின்ற பாங்கிலே, பார்வையாளர்களின் எழுச்சியும் உணர்ச்சியும் சில சமயங்களில் எல்லைத் தாண்டிப் போய் விடுவதும் உண்டு.

கிரிக்கெட் ஆட்டத்திலே, இதுபோன்ற கிளர்ச்சி மிகுந்த சூழ்நிலைகள், கேட்டால் நம்ப முடியாத அளவுக்கும் நடந்தேறியிருக்கின்றன. நலம் கெட்டும் போயிருக்கின்றன. நடுவர்களிடம் மோதுவது, விக்கெட்டின் குறிக்கம்புகளை எத்துவது, ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து இழுப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகவும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால், சில சமயங்களில் பார்வையாளர்களின் ஆர்வம் காரணமாய் பண்ணுகின்ற அட்டகாசம் அதை அக்கிரமம் என்றுகூடக் கூறலாம், எல்லை மீறிப்போய், நடைபெறுகின்ற ஆட்டத்திற்கே தொல்லையாய் முடிவதுண்டு.

1980ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் நூற்றாண்டு விழாப்போட்டியில், இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் போட்டியிட்டன. போட்டி நடைபெற்று வருகின்ற மூன்றாம் நாள், கடுமையான மழை பெய்ததன் காரணமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்களுக்கு விளையாட்டுப் போட்டி இல்லாதது என்னவோ போல் இருந்தது. எதையோ பறிகொடுத்தவர்கள் போல வெறுமனே அமர்ந்திருந்த