பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. நடுத்தர வயதும் கலமான வாழ்வும் ஆசையின் அசைவு ஆசை கொள்வதில் தவறில்லை. அதை அழகாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நினைவும், நிதான புத்தியும், செய்கையும்தான் ஒருவருக்கு வேண்டும். அறிவிருந்து, அவலமான உடலும், கட்டுமஸ்தான தேகமிருந்து முட்டாள்தனமாக இருந்தும் பயன் ஒன்று மில்லை. அதனால் துன்பமே நிறையும்.

எனவே நாம் நன்றாக. பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமானல், வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள உடலையும் அதனை ஆட்சி செய்கின்ற அறிவை யும் ஈடற்ற முயற்சியுடன் பேணிக் காக்க வேண்டும்.

சுவையாக இதயத்தில் அரும்புகின்ற ஆசை, நாளுக்கு நாள் மொட்டாகிப் போதாகி மலராகி விடுகின்றபோது, இன்ப மணத்தை மட்டும்தருவதில்லை அது துன்ப மயமான கனத்தையும் அல்லவா தந்து விடுகிறது.