பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 யான ஒழுங்கும் வகையான பழக்க வழக்கமும் பிள்ளைப் பருவத்தில்தான் ஊட்ட முடியும் நிலைகாட்ட முடியும்? நல்ல பழக்க வழக்கங்களைப் பயிற்றுவிக்க, பிள்ளைகளை பிடிக்க வேண்டும். அதுதான் ஏற்ற பருவம். அஞ்சில் வளைகின்ற பருவம். அஞ்சி ஏற்றுக்கொண்டு, அஞ்சாமல் நினைவில் வளர்த்துக்கொள்ளும் பருவம்.

மீண்டும் நாம் பாரதியை நினைவுக்குக் கொண்டு வருவோம் ஓடி விளையாடு பாப்பா, ஒய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந் தையை வையாதே பாப்பா.”

விளையாட்டு உணர்ச்சியே மேலோங்கி, விளையாட் டையே உணவாகவும், உணர்வாகவும் கொண்டு விளங்கி, விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் பிள்ளைகளைத்தான், பண்பு நலம் கற்றுத் தர பிடித்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த குடிமக்கள் எப்படி அமைய வேண்டும்? என்று விரும்புகின்ற நாட்டோருக்கு ஒரு மேல் நாட்டு விளையாட்டுத் துறை நிபுணர் சவால் விடுவதுபோல் கூறினர் என்னிடம 50 குழந்தைகளைத் தாருங்கள், இந்த விளையாட்டரங்கத்திற்குள்ளேயே சிறந்த மக்களாக மாற்றுகிறேன்-எவ்வளவு கம்பிக்கை அவருக்கு.

ஒடும் நீரில் தெளிவு

உண்மைதான். ஒடுகின்ற நீருக்கு வழியமைத்துத் தந்தால், எவ்வளவு விரைவாக ஒடும் என்பது நாமெல் லாம் அறிந்ததே. விளையாடுகின்ற குழந்தைகளைப்