பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. விளையாட்டு உலகம்



பங்கு பெறுவது எப்படி ?

தெய்வத்தின் திருநாமத்தைக் கூறி, தெய்வம் வாழ்கின்ற 'திருப்பதி' என்று தீர்க்கத் தரிசனமாகக் கூறப்படுகின்ற, ஒலிம்பியா என்னும் இடத்திலே. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒலிம்பிக் பந்தயங்களை முன்னாள் கிரேக்க மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த ஒப்பற்ற, உன்னதமான ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவது என்பதை பகீரதப் பிரயத் தனத்திறகே ஒப்பிடலாம். ஆமாம், அவ்வவவு கடினமான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் அமைத்து, கடுவன் பூனை போலவே காத்து வந்தனர் கிரேக்க நாட்டினர்.

பந்தயங்களில் பங்கு பெற விரும்பும் ஒருவன் பிறப்பில் கலப்பற்றவனாக, ஒழுக்கத்தில் தூய்மையான கிரேக்கக் குடிமகனாக இருக்க வேண்டும். அவன் பத்து மாதங்கள் விடாமல் விளையாட்டுப் பயிற்சி செய்திருக்க