பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18


மட்டும் இன்பமாக வாழ்ந்து விடுவோமே என்று வேண்டாத வழிகளில் சென்று வாழ்வை அனுபவிக்க முயல் வோரும் உண்டு.

மதலையாக உருவெடுத்து, முதுமைக்கும் சாவுக்கும் இரையாகும்வரை, இருக்கின்ற நாட்களையே நாம் வாழ்வு என்கிருேம். அந்த வாழ்வை நல்ல வாழ்வாக, நலமான வாழ்வாக, மகிழ்வான வாழ்வாக மாற்றிக் கொள்ளவே ஆண்டவன் நமக்கு ஆறாவது அறிவைக் கொடுத்து இருக்கிருன். அந்த அறிவை வைத்துக் கொண்டு ஆண்டவனைப் பற்றியே ஆராய்ச்சி நடத்துவதற்காக அல்ல.

நல்ல வாழ்வு எங்கே எப்படி கிடைக்கும் என்றால் பணத்தால் கிடைக்கும் என்று ஒரே வார்த்தையில் பதில கொடுப்பவாகளே இன்று நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

நாடகத்தில் கடிக்கும்பொழுது ஒப்பனை அவசியம் வேண்டும். ஆனல் அந்த ஒப்பனை ஓரளவுதான் அழ காக இருக்கக் கைக்கொடுக்குமே தவிர நடிப்புக்கோ, நடப்புக்கோ, பேச்சுக்கோ, மற்றவைகளுக்கோ அதுகை கொடுப்பதில்லை. முயன்றால் அதுவும் முடியாது.

விருந்தும் மருந்தும்

அதுபோலவே, பணம் வாழ்வுக்குத் தேவைதான். ஆனல் பணமே வாழ்வாகி விடுவதில்லை. கோடிகோடி யாகப் பணத்தைக்குவித்துக்கொண்டு,பதுக்கிவைத்துக் கொண்டு திரியும் கோடீஸ்வரர்கள், நமது முன்னேர்கள் நோய் வந்தால் பத்தியம்’ என்பார்களே அதுபோல, உணவு உண்ண இயலாமல், மருந்து உட்கொள்வதிலே