திருக்கும் உள்ளமுமே ஒருவரின் வாழ்க்கையை இன்ப உலகமாய் மாற்றும்.
ஆகவே வாழ்க்கைக்குத் தேவையான வழிகளை, முறைகளை, விவேகங்களை எல்லாம் முன்னரே அனுபவ மாகப் பெற்று, பட்டுப் பட்டுத் திருத்திக்கொண்டு புதிய திறன் காணுகின்ற பண்புகளை, விளையாடும் மைதானமே வழங்குகிறது. பயிற்சி அளிக்கிறது. வாழ்வின் ஒத்திகை மன்றமாக, பயிற்சிக்கூடமாக விளங் குகிறது. வாழ்வாங்கு வாழும் பரிசினையும் அளிக்கிறது.
பயிற்சி பெறுவோர் பாராட்டும்படி நடக்கிருர். புகழ் பெற்று வாழ்கிருர். பயிற்சி பெருதார், பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிருர். ஆகவே, பகுத்துணரும் அறிவு பெற்ற மனிதர் எல்லாம் சிறந்த வாழ்வு பெற விளையாட்டின் துணையைப் பெறுவார்களானால், புதிய சமுதாயமே உருவாகும். இளைய தலைமுறையும் மேலும் திறமையாக மலரும்.
பிறந்த நாடும், பிறப்பித்தப் பெற்ருேரும், பேரும் புகழும் பெற்றுப் பெருமையுடன் வீறு கொள்ள, வாருங்கள் விளையாடுவோம் என்று உங்களையெல்லாம் அழைக்கிரறோம் விளையாடும் இன்பத்திற்கு ஈடும் இணையும் எங்கே உண்டு?
இன்பத்தை இறைத்து மனித குலத்தை வாழ் வாங்கு வாழ வைக்கும் விளையாட்டின் தத்துவமே தனி தான். கனிதான். எளிதாக, இனிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதால்தான், விளையாட்டுத் தத்து வங்கள் மேதினியை ஆள்கின்றன. மக்களுடன் வாழ்கின்றன.