பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. விளையாட்டால் மூளை விருத்தியடைகிறது

மணியான மனித பிறவி

மனிதப் பிறவி மணியான பிறவியாகும். அந்த அற்புதத்தை அறிந்தால்தால்தான் ஒளவைப் பிராட்டியும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது’ என்று பாடினர். புல்லாய் பூண்டாய் பிறவி எடுத்து, இறுதி யில் புனிதமாகப் பெற்ற மனிதப் பிறவியானது, பெருந் தவத்தால் நமக்குக் கிட்டி இருக்கிறது என்று பக்திப் பெருக்குடன் பரமனைப் புகழ்ந்து பாடினர்கள் பெரியோர்கள். அத்தகைய அரிய பிறவியாம் மனிதப் பிறவி யானது, அனைத்து உயிர்களிலும் அமைப்பாலும், வடிவத்தாலும், தரத்தாலும், திறத்தாலும் மேம்பட்டே விளங்குகிறது. சிந்திக்கவும், சிரிக்கவும், பேசவும் கிமிர்ந்து கிற்கவும் ஆற்றல்பெற்ற மனித இனமானது மண்ணுலகில் மாபெரும் சரித்திரமே படைத்து வரு கின்றது.