59 கோயிலென்றும், அழகு விளங்குவதால் இல்லம் என்றும் அழைக்கப்படும் வீடுதான், இந்த உலகவாழ்கையை இன்பமுடன் வாழ்ந்து விட உதவும் இனிய நிலைக்களனாகும். வெறும் விடுதிபோல வந்து, இருந்து தங்கிப் பொழுதைப் போக்கி விட்டுப் போகின்ற இடமல்ல வீடு என்பது. வயிறு புடைக்க உண்ணவும், வாய் கிழியப் பேசவும், விடிய விடிய உறங்கவும்தான் வீடு என்று நிநநைணப்பதும் வடிகட்டிய முட்டாள்தனத்தின் உச்சக் கட்டமாகும்.
குடும்பம் என்பது வளர்ச்சிக்குரிய இடமாகும்.
உடலாலும், உள்ளத்தாலும், நேர்மையாகவும், சீர்மை பாகவும் செழிப்புற வளர்த்து விடும் இடம்தான் குடும்பம் என்னும் கோயிலாகும்.
அழகு இருக்குமிடம், அறிவு சுரக்குமிடம், அனு பவம் பிறக்குமிடம், ஆனந்தம் பெருகுமி-ம், அற்புதம் விளக்கும் இடம் என்று உலகத்தாரால் உண்மை பாகவே கருதப்படுகின்ற வீட்டிலேதான், பெற்ருேர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இயல்பாகப் பழக முடியும். மயமாக உறவாட முடியும்.
பெற்ருேரும் பிள்ளைகளும் பிள்ளைகள் எல்லோருமே தமது பெற்ருேர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பெரியவர்கள் செயல்படுகின்ற முறைகளை, வெகு சிரத்தையுடன் பார்த்துக் களித்து அவற்றையே நேர் முகமாகவும், மறைமுகமாகவும் பழகிக் கொள்ளவும் முனைகின்றனர். ஆகவே, நல்ல குழந்தைகளாக தங்கள்