பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67 செயல்புரிந்து, வீர சரித் திரத்தையே தோற்றுவித்து மறைந்திருக்கின்றனர், மற்ற எல்லாருமே, மங்கள வாழ்வு ஒன்று போதுமே என்று வாழவே தலைப்பட்டு இருந்தனர். வாழ்ந்தும் சென்றனர் . என்ருலும், பெண்கள் அளப்பரிய ஆற்றல்மிக்கவர் கள் என்று எல்லா நா ட்டு இலக்கியங்களுமே ஏகமன தாகக் கூறி இருக்கின்றன . வெறி கொண்டு தாக்கிய முரட்டுப் புலியை, வெறும் முறத்தாலே தாக்கி விரட்டினுள் ஒரு தமிழ்ப் பெண் என்று நமது தமிழிலக்கியம் சங்கநாதம் முழக்கும்.

ஆங்காங்கே நமக்குக் கிடைக்கின்ற குறிப்புகளில் எல்லாம், நமது முன்னைய பெண்ணினத்தார், நந்தவனங் களி லே பூப்பறித்து விளையாடியதும், பூப்பந்தாட்டம் ஆடியதுமாகவேதான் பொழுதுபோக்கி வாழ்ந்திருக் றனர்.

விரத்தாய் விளையாட்டுப் பந்தயம் என்றதும் கம் நினைவுக்கு நருவது கிரேக்கம்தான். அங்கே, ஆற்றல்மிகு காளையினம், ஒலிம்பிக் பந்தயத்தில் போட்டியிடுவதை மிகவும் முப்பற்ற பெருமையாகவே கருதி வாழ்ந்தது. பத்து பாதம் இடைவிடாப் பயிற்சி. பந்தய மைதானத்திலே பிறந்த மேனியுடன் போட்டி. அதைப் பார்க்கக் கிரேக்கமே கடலெனத் திரண்டு வரும காட்சி, இப்படி கான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பற்ற ஆண்மையின் ஆட்சி

இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கிடையே ஆண்களைத் தான் காணமுடியும். பெண்களை அந்தப் பக்கங்களிலே