பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 77 வந்து ஆடுகளத்தில் இயங்கிவிட்டான் என்ருல் அவன் உழைப்பு என்பதை உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளும் உணர்வுகளுடன்தான் பங்கு பெறுகிருன்.

இவ்வாறு ஆர்வத்தால் வந்து, உழைப்பே உறுதி தரும் என்ற விளையாட்டின் அழைப்பைத் தலைமேற். கொண்டு, விளையாட்டுக் கலை பயில விரும்பி வரும் இளைஞர்களே, ஆட்டக்காரர்களை சந்திக்க வைக்கும் 'சந்திப்பு' இடமாகத்தான் ஆடுகளம் இருக்கிறது.

சேர்ந்த எல்லோரும், 'விளையாட்டு'எனும் செயல்தனில் ஈடுபடுகின்றபொழுது, அவர்களுக்கு ஆயிரமாயிரம் புதிய சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்து அலை போல் அங்கு வந்து மோதுகின்றன. அத்தனேக்கும் ஈடுகொடுத்து, அவர்கள் சிந்தனையின் துணையால் ஆடும் பொழுது, எத்தனை எத்தனை விதமான வழிகளில் செயல் படுகின்ருர்கள், அத்தகைய புதிய கருத்துக்களே, சிந்தஜனகளெப் படைத்துத் தரும் சிந்தனைக் களமாக ஆடுகளம் இருக்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான திறமை வேண்டும். அந்தந்தத் திறன் நுணுக்கங்களில் ஆழ்ந்த புலமையும், வளமையும் பெறுவோரே சிறந்த ஆட்டக்காரராக மாறமுடியும். அத்தகைய புதிய திறன் நுணுக்கங்களை உற்பத்தி செய்கின்ற தொழிற் கூடமாக ஆடுகளம் இருந்து துணை செய்கிறது.

விளையாட்டு என்ருல் விதிகள் உண்டு. விளையாடு வதற்கென்று வழிமுறைகள் உண்டு. நிறைவான பண்பும், தரமான செயல் குணமும் உண்டு. ஆகவே, இவை கலமானவை இவை தீயவை, தீங்கு பயப்பவை