பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 80 புகழ் பெற ஒழுக்கமான செயல்முறை தேவை என்று ஒவ்வொருவரையும் உணரச் செய்வது ஆடுகளத்தின் பெருமையாகும்.

தவருக ஆடுபவர்கள் தண்டனை பெறுகின்ருர்கள். பார்வையாளர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளா கின்ருர்கள். ஆகவேதான் வாழ்வுக்கு வழிகாட்டியாக ஆடுகளம் விளங்குகிறது என்கிருேம்.

பணத்திற்கும், பகட்டிற்கும், சாதிக்கும், சமயத் திற்கும், ஏற்றத்திற்கும், தாழ்விற்கும் இங்கே இட மில்லை. ஆடுகளத்திற்கு வெளியே ஆயிரமாயிரம் அட்டுழியங்கள் புரிந்து, ஆட்டக்காரர்களாகப் பலர் உள்ளே வந்தாலும், ஆட்டத் திறமையற்றவர்கள் செல்லாக் காசாகத் துரக்கியெறியப்படுவார்கள் என்பது கண்கூடு.

ஆடுகளம் செல்வோம். பீடுநடை பயில்வோம் புதுமைக் கருத்துக்களைப் பெறுவோம். பேரின்ப வாழ் வினில் மகிழ்வோம்.

இவ்வாறு ஆடிப்பழகவும், ஒடி மகிழவும் நல்ல உடல் ஒன்றின் உறுதுணை அவசியமல்லவா! அதன் அமைப்பினைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.