பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பரிசளிக்கப்பட்ட புத்தகங்களை அறிவானந்தத்திடம் சேர்த்து, மன்னிப்புக் கேட்கிறான். தீய வழியில் சென்ற சிங்காரம் சிறு சேமிப்பு விழாவில் விழிப்படைந்து திருந்தி தூயவனாகி விடுகிறான்.

இதுவே கதை

இக்கதையில் சேமிக்கும் பழக்கத்தின் சிறப்பும் சிக்கன உணர்வின் தேவையும் உயிர் நாடியாக விளங்கு கின்றன. இளம் வயதிலேயே இந்தப் பண்புகளைப் பெற வேண்டிய அவசியத்தை இந்த நாவல் சொல் கிறது.

சேமிப்பின் சிறப்பு என்ன?

'மனிதனைவிட குறைந்த அறிவு படைத்த உயிரி னங்களெல்லாம் தவறாமல் சேமித்து வைத்துப் பயன டைகின்றன. மழைக் காலத்துக்கு வேண்டும் என்று வெயில் காலத்தில் இரையைத் தேடிச் சேமிக்கின்றது எறும்பு. அதேபோல் தேனி, தேனைச் சேர்த்து வைத்துப் பயனடைகின்றது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சம்பாதிக்கும் காலத்தில், வருங்காலத்திற்கு வேண்டுமே எனச் சேமிப்பதில்லை. வருமானம் இல் லாத வயதான காலத்தில் தடி ஊன்றித் தள்ளாடும் பரு வத்தில் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வழி யின்றி வருந்தி நிற்கிறான். எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதில்லை. இளமையில் சேமிப்பு உணர்வு இருப்பதில்லை. ஆடம்பரமாக வாழ்ந்து விட்டு முதிய வயதில் கையேந்திப் பிச்சை கேட்கும்