பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

ள்ளியின் மணி கண கண' என

ஒலித்தது. பரந்த வெளியின் மேற்குப் புறத்தில் கம்பீரமாக நின்றிருந்த பள்ளியின் அமைதி மணியோசையினால் குலைந்தது. கூட்டி னுள் அடைபட்டிருந்த பட்டாம்பூச்சிகள் கூட் டங்கூட்டமாகச் சிறகடித்துப் பறந்து வெளியேறு வதுபோல் மாணவ, மாணவிகள் குதூகலத்தோடு வகுப்புகளைவிட்டு வெளியே வந்தனர். அவர் களின் முகங்களில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. பைகளை முதுகில் சுமந்தபடியும் கைகளில் ஏந்தி யபடியும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டு தத்தமது வீடுகளை நோக்கி நடையைக் கட்டினர்.

மண்ணும் மணலும் கலந்திருந்த பள்ளி மை தானத்தின் இரு மருங்கிலும் அசோக மரங்கள்