பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விழா தந்த விழிப்பு

'என்ன காளிமுத்து இங்கே நிற்கிறே? யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலத் தெரியுது. யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறே?" முருகு கேட்ட கேள்வி அவனுக்கு ஒரு புரட்டாக இருக்கவில்லை அவன் அசட்டையாகவும் சாதார ணமாகவும் பதில் அளித்தான்.

'இன்னிக்குச் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதா சிங்காரம் சொன்னான். அவனுக்கா கத்தான் பொட்டலத்தோடு காத்திட்டிருக்கேன். வருவதாகச் சொன்ன அவன் இன்னும் வந்த பாடில்லை. சிங்காரம் வராததால் ஏற்பட்ட சலிப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.

காளிமுத்துவின் பதில் முருகுக்குச் சற்று வியப்பாகவே இருந்தது. காளிமுத்துவையும் அவன் கையிலிருந்த பொட்டலத்தையும் மாறி மாறி ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்த முருகு தன் ஐயத்தைப் போக்கிக் கொள்ள முயன்றான்.

'பொட்டலமா? சினிமா பார்க்கப் பொட் டலம் எதுக்குடா?"