பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 31

முருகு கேட்ட கேள்வி காளிமுத்துக்குச் சிரிப்பை வரவழைத்தது. எனினும் அதை அடக்கிக் கொண்டு பூஞ்சிரிப்பு சிரித்தபடி முரு குவின் ஐயத்தைப் போக்கும் வகையில் பதில் கூற முனைந்தான் காளிமுத்து.

'உனக்குத்தான் சிங்காரத்தைப் பத்தி நன் றாகத் தெரியுமே. வகுப்பிலேயே ஆசிரியருக்குத் தெரியாம, ஏதாவது நொக்கு நொறுவலை மென் னுகிட்டே இருப்பான் ஜாலியா சினிமா பார்க் கும்போது சும்மா இருப்பானா? அவன்தான் சரி

யான அறவை எந்திரம்' ஆச்சே,

ஒருவாறு நண்பன் புராணம் பாடி முடித் தான் காளிமுத்து.

"அதுக்காக, நீ உன் காசிலே பொட்டலம் வாங்கிட்டுப் போறேயாக்கும். பொட்டலம் கூட பெரிசாத்தான் இருக்குது கேலியும் கிண்டலும் கலந்தவாறு பேசினான் முருகு.

இதைக் கேட்ட காளிமுத்து 'என் காசிலே வாங்கலேடா!' இவையெல்லாம் வாங்க சிங்கா