பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 33

நினைக்கிற மாதிரி சிங்காரத்துக்கு அவன் அப்பா காசு கொடுக்கிறதே இல்லை. அவர் கொஞ்சம் 'கஞ் சன்னு சிங்காரமே சொல்லியிருக்கான்'

இதைக் கேட்ட முருகு அப்போ, சிங்காரம் அம்மாவின் செல்லப்பிள்ளை'ன்னு செல்லு!" என்று கூறி பலமாகச் சிரித்தான்.

தொடர்ந்து மேலம் விளக்க முனைந்தான் காளிமுத்து.

'சிங்காரத்தோட அம்மா ரொம்ப நல்லவங் கடா. அவங்களுக்கு இவன் ஒரே பையன். அத னாலே இவன் மேலே உயிரையே வச்சிருக் காங்க. வசதிக் குறைவான குடும்பம்தான். இருந் தாலும் அவனை நல்லா படிக்க வைக்க ரொம்ப ஆசைப்படறாங்க. அதுக்காக அவன் என்ன கேட்டாலும் தர்றாங்க. எல்லாமே அவன் அப்பா வுக்குத் தெரியாமல்தான்!”

காளிமுத்து கூறியதைக் கேட்ட முருகு மேலும் சிங்காரம்பற்றி தெரிந்து கொள்ள ஆவ லானான் தொடர்ந்து சிங்காரம் பற்றி காளிமுத்து விளக்கினான். காளிமுத்துக்குச் சிங்காரம் குடும்

3