பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விழா தந்த விழிப்பு

நோயைச் சேர்க்கிறே. இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற வேறுபாடு."

முருகுவின் பேச்சு சிங்காரத்துக்கு மூக்கு டைப்பாக இருந்தது. காளிமுத்து அதில் உண்மை இருப்பதை அறிந்து ஆமோதிப்பதுபோல் தலை யை ஆட்டினான். இதற்குச் சரியான பதில் கூறத் தெரியாமல் சில விநாடிகள் சிங்காரம் விழித் தான். பிறகு சமாளித்துக் கொண்டான்.

'அறிவானந்தத்துக்கு ஒத்துப் பாடறதே உனக்கு வேலையாப் போச்சு'டா சரியான 'ஜால்ரா! உன்கூடப் பேசி என்ன பயன்? நாங்க சினிமாவுக்குப் போகணும். வா. காளிமுத்து போகலாம். நான் வர்றேன்'டா' என மழுப்பிப் பேசியபடி புறப்பட்டான். காளிமுத்துவும் தின் பண்டப் பொட்டலத்துடன் அவனைப் பின் தொடர்ந்தான்.

'படிப்பைத் தவிர மற்ற எல்லாத்தையும் செய்யறாங்க என்று தனக்குத் தானே முணு முணுத்தபடி நடையைக் கட்டினான் முருகு.