பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 43

குட்டிச்சுவராகாமல் காக்கும் இடங்கள். கத்தி யைக் கூர்மையாக்குகிற சாணை மாதிரி புத்தி யைக் கூர்மைப்படுத்துகிற கோயில் நூலகம். "வருங்கால வாழ்க்கைக்குப் பாதுகாப்புத் தருகிற கேடயம் சேமிப்பு என்று நம்ம ஆசிரியர்கூட அடிக்கடி சொல்றதைக் கேட்டிருப்பியே..." அறி வானந்தம் முடிக்கவில்லை.

இடைமறித்தான் முருகு.

"ஆசிரியர் சொல்றதைச் சிங்காரம் என் னிக்குக் கேட்டிருக்கான், இன்னிக்குக் கேட்க."

சிங்காரத்தைப்பற்றி கூறிய அதே சமயம் அறிவானந்தத்தைப் பார்த்துக் கேட்டான்.

'போகட்டும். ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பு வார விழாவிலே 'சிறந்த சேமிப்பு மாணவன்னு உன்னைத் தேர்ந்தெடுக்குறாங்க. அதற்கான பரிசையும் நீயே வாங்குறே. வசதிக் குறைவான உன்னாலே எப்படி தொடர்ந்து சேமிப் பில் காசு போட முடியுது?"

இப்படியொரு சந்தேகம் நீண்ட நாட்களாக முருகுவின் மனதில் இருந்து கொண்டேயிருந்