பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 47

அறிவானந்தம் பதிலைக் கேட்டுச் சிங்காரம் ஏளனமாகச் சத்தமிட்டுச் சிரித்தான். அவன் சிரிப் பில் எக்காள உணர்வு கொப்பளித்தது. அறிவா னந்தத்தை மட்டம் தட்டவும் அவன் சினிமா ரச னையைக் கேலி செய்யவும் தனக்கு வாய்த்த வாய்ப்பாகக் கருதி தொடர்ந்து பேசினான்:

பள்ளிக்கூட சினிமாவை நீதான்'டா மெச் சிக்கணும் சண்டைக் காட்சியே இல்லாத பள் ளிக்கூடச் சினிமா ஒரு சினிமாவா? பெரிய அறுவை'டா சலிப்புடன் சிங்காரம் கூறி முடித் தான்.

'படிப்பையும் பள்ளிக்கூடத்தையும் கூட 'அறுவை'ன்னு சொல்ற உனக்குப் பள்ளிக்கூடச் சினிமாவும் அறுவை'யாகத்தானே இருக்கும்!" இது அறிவானந்தத்தின் சூடான பதில்.

இடைமறித்தான் முருகு

'அறிவானந்தம் சேமிப்புத் திட்டத்திலே உனக்கு எப்படி இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது? ஆண்டுதோறும் சிறந்த சேமிப்பாளன் என்கிற பரிசும் உனக்குத் தானே தொடர்ந்து கிடைக் குது?’’