பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விழா தந்த விழிப்பு

ள்ளி இடைவேளையின்போது வழக்க

மாக நண்பர்கள் சந்திக்கும் பள்ளிக்கூட மரத்தடியில் காளிமுத்து மட்டும் நின்று கொண் டிருந்தான். அவனை நோக்கி சுந்தரம் வந்தான். வந்ததும் வராததுமாகக் கேட்டான்:

'காளிமுத்து எங்கே சிங்காரத்தை ரெண்டு நாளாகக் காணோம்? அவனுக்கு என்ன ஆச்சு?" என்றான்.

'உனக்குத் தெரியாதா? அவனுக்கு இரண்டு நாளா ஒரே வயிற்றுப் போக்கு. இப்பத்தான் அவனைப் பார்த்துட்டு வர்றேன். அவனை அவங்க அப்பா ரொம்பத் திட்டிட்டார்டா!.

காளிமுத்து சொல்லி முடிக்குமுன் பதற்றத் துடன் சுந்தரம், 'ஏன், ஏதாவது தப்புப் பண்ணிட் டானா?" என்று கேட்டான்.