பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விழா தந்த விழிப்பு

முடிவுக்கு வந்தவன்போல் தலையை மேலும் கீழுமாக ஆட்டியபடி பேசினான்:

'போதும்'டா உங்கக் கேலிப் பேச்சு. இந்த ஆண்டு எப்படியும் அந்தப் பரிசுகள் அவனுக்குக் கிடைக்காது. எனக்குத்தான் கிடைக்கும் இது உறுதி!'

சிங்காரத்தின் அழுத்தந் திருத்தமான முடி வும் பேச்சும் நம்ப முடியாததாக இருந்தது. ஆச்ச ரியத்தோடு அவர்கள் இருவரும் ஒருவரை ஒரு வர் பார்த்துக் கொண்டனர்.

சிங்காரம் மனதுக்குள் ஏதோ முடிவெடுத்து விட்டான். அதனால் தான் இவ்வளவு உறுதி யாகப் பேசுகிறான் என்பதை முருகால் ஒரளவு அனுமானிக்க முடிந்தது. ஆனால், அது எந்த மாதிரியான முடிவு என்பதை அவனால் அனுமா னித்து உணர முடியவில்லை. இருப்பினும் சிங்காரம் வீம்புக்காக இப்படிப் பேசுவதாக முருகு நினைத்தான். இருந்தாலும் உறுதிப்ப டுத்திக் கொள்ள கேள்விக் கணை தொடுத்தான்.

"அதெப்படி, சிங்காரம் அவ்வளவு உறுதி யாகச் சொல்றே. சாதாரணமாக, பள்ளிக்கூடப்