பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விழா தந்த விழிப்பு

ள்ளிக்கூடம் முடிந்தது. மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெறியேறி, வீடு நோக்கிச் செல்லத் தொடங்கினர். வகுப்பு அறையை விட்டு வெளிவந்தான் சுந்தரம். மூன்றாவது நாளான இன்றும் அறிவானந்தம் பள்ளிக்கு வராதது ஏன் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வப்பட்டான்.

இதுவரை பள்ளிக்கு அறிவானந்தம் தாமத மாக வந்திருக்கிறான். ஆனால், பள்ளிக்கே வரா மல் மட்டம் போட்டது கிடையாது. இப் போது அவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? இப்படி யெல்லாம் எண்ணித் தவித்தான் சுந்தரம்.