பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 65

'தொடர்ந்து மூன்று நாட்களாக அறிவா னந்தம் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவ னுக்குத் தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி என்ன சூழ் நிலை?' அவனுள் ஆர்வம் அதிகரித்துக் கொண் டே சென்றது. தொடர்ந்து பள்ளிக்கூடம் வராத காரணத்தை எப்படியாவது அறிந்த பின்பே வீடு திரும்புவது என்ற வைராக்கியத்துடன் நடையை ஒட்டினான்.

யாரைக் கேட்பது? யாரோடு தொடர்பு கொண்டால் சரியான தகவல் கிடைக்கும்? இந்தக் கேள்வி அவனுள் எழுந்தபோது அவ னுக்கு முருகின் நினைவு வந்தது. முருகு, அறிவா னந்தத்தின் நெருங்கிய நண்பன் ஆயிற்றே. அவனுக்குத் தெரியாமல் இருக்கமுடியாது. எனவே, அவனைப் பார்க்கக் கிளம்பினான்.

தேடிய முருகு எதிரே வந்தான். ஆவலோடு அவனை அணுகி அறிவானந்தம் பள்ளிக்கூடம் வராததுபற்றிக் கேட்டான்.

அறிவானந்தம் மருத்துவ மனையில் இருப் பதாக முருகு கூறினான். அதைக் கேட்ட சுந்தரம் பதைபதைத்தான்.

5