பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



இக்கதையின் நாடக வடிவம் சில ஆண்டுகட்கு முன்னர் அனைத்திந்திய வானொலி, சென்னை நிலைய சிறுவர் நாடக விழாவில் 'விழா தந்த விழிப்பு' என்ற பெயரிலேயே ஒலிப்பரப்பாகியது. சிறுவர்க்கேற்ற பயனுள்ள கருத்துக்களை, குறிப்பாக சிறு சேமிப்புச் சிந்தனையை ஊட்டிய இந்நாடகத்தைப் பலரும் பாராட்டினர். நூலாக வெளியிட வேண்டுமென அன்பர் பலர் வலியுறுத்தினர். அவர்தம் விருப்பத்திற்கிணங்க நூலுருப் பெற்று இன்று உங்கள் கரங்களில் தவழ்கிறது.

சிறுவர் நாடக விழாவில் சிறப்பு நாடகமாக ஒலி பரப்பிய வானொலி நிலையத்தாருக்கு என் நன்றி.

தரமான நல்ல நூல்களை வெளியிட்டு வரும் 'மீரா பப்ளிகேஷன்' பதிப்பகத்தாரின் வெளியீடாக இந்நூல் வெளி வந்தது. இப்போது திருத்திய இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. எனது மற்ற நூல்களைப் போன்றே இந்நூலையும் வாசகர்கள் ஆதரித்து ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன்.

அன்பன்
மணவை முஸ்தபா
ஆசிரியர்.