பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விழா தந்த விழிப்பு

சுந்தரத்தின் அனுதாபத்துக்கு ஆறுதல் அளிக் கும் வகையில் முருகு மேலும் கூறினான்:

“டாக்டர் ரொம்ப நல்லவர்'டா. அவன் மேலே ரொம்பப் பிரியமா இருக்கார். ரொம்ப அக்கறையோட அவன் அம்மாவுக்கு வைத்தியம்

பார்க்கிறார்."

'டாக்டர் என்று கூறியவுடன் ஏதோ நினை வுக்கு வந்தவன்போல் 'டாக்டர் நாதன் தானே அவர்?’ என்று கேட்டான் சுந்தரம் ஆமா என்று முருகு சொன்னவுடன் பெரிதும் மகிழ்ந்தவ னாகக் காட்சியளித்தான்.

மேலும் சுந்தரம் தொடர்ந்தான்:

'அந்த டாக்டர்தான் நம்ப பள்ளிக்கூட சிறு சேமிப்பு வார விழாவுக்குத் தலைமை வகிக்கப் போகிறார். அவர்தான் சிறந்த சேமிப்பாளனுக்கு பரிசும் கொடுக்கப் போகிறார். ' என்று காளி முத்து கூட கூறினான் என்று சுந்தரம் சொல்லி மடிக்கவில்லை. அதற்குள் காளிமுத்து மூச்சு இறைக்க வேகமாக அங்கு வந்து சேர்ந்தான்.