பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 75

(8)

னால் அந்தச் செய்தியைக் கேட்ட

திலிருந்து சிங்காரத்துக்கு ஒரே மகிழ்ச்சி. அறிவானந்தம் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பதுதான் அந்த மகிழ்ச்சி யான செய்தி. இதை யாரிடமாவது சொல்லி, தன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள விரும்பினான். அப்போது அங்கு வந்து சேர்த்தான் சேகர். சேகர் அவன் வகுப்பில் படித்து வருபவன். அவனிடம் மகிழ்ச்சி பொங்க, 'டேய் சேகர் உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன்!”

செய்தி என்ன என்று சொல்லாமலே பீடி கை போட்டான் சிங்காரம்.

"என்னடா, சிங்காரம் என்னை ஒட்டலுக் கோ சினிமாவுக்கோ கூட்டிட்டுப் போகப் போறியா? அதைத்தானே சொல்லப் போறே' சிங்காரத்தின் இயல்பு அறிந்த சேகர் அவசரப் பட்டுக் கேட்டான்.

'அடுத்தவன் பாக்கெட் காலியாவதுதான் உனக்குச் சந்தோஷமாக்கும் டேய் நம்ம அறிவா னந்தம் ஆஸ்பத்திரியிலே இருக்கானாம்!"